கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் எதிர்வரும் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கொடுத்தார்.

அப்போது பேட்டியளித்த புகழேந்தி, எடப்பாடியை ஒரு பொருட்டாகவோ அல்லது போட்டியாகவோ நாங்கள் கருதவில்லை. அவர் தன்னையே பொதுச் செயலாளர் என்று கூறிய நாடக நடத்துவதாக காட்டமாக புகழேந்தி விமர்சித்துள்ளார். சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.