வடகொரியாவின் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜப்பான் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சி செய்து வருகிறது. இதனை பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதிய வடகொரியா போர் பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்த நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் தென்கொரியா தொடர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இதனால் தென்கொரியாவில் இருக்கும் விமான நிலையங்கள் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது தென்கொரியா எல்லைகளை ஆக்கிரமிப்பது போன்று வடகொரியா ஒத்திகை பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக அதிநவீன ஏவுகணைகள் இரண்டை வடகொரியா அனுப்பி சோதனை செய்துள்ளது. ஐநாவின் உடன்படிக்கையை மீறும் வடகொரியாவின் இத்தகைய செயலால் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.