தன்னுடைய பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் பாலா கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்குமே இல்லை. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி சினிமா வாய்ப்பு தேடும் இளம்பெண்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளனர். எனவே விழிப்புணர்வுடன் இருங்கள் என தெரிவித்துள்ளார்.