சேலம் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றியம் இருப்பாளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, பாமக, தேமுததிக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து விலகிய 1500 க்கும் மேற்பட்டவர்கள், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில்  அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டு 7 பாலியல் வன்கொடுமைகள் நடந்தது. திமுக ஆட்சியில் 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் 58 பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சராக இருப்பவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.