விப்ரோ நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ மாறிவரும் சந்தை சூழலுக்கு ஏற்றவாறு ஊழியர்களின் திறனை கணக்கில் கொண்டு பணி நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விப்ரோ நிறுவனம் தனது மார்ஜின் அளவுகளை மேம்படுத்த முயற்சி செய்யும் காரணத்தால் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும். இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.