இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று கூறி ரயில்வே அமைச்சகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை.

ரயில்வே பாதுகாப்பு படைப்பில் 19,800 கான்ஸ்டபிள் பதவிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை. ரயில்வே அமைச்சகம் அப்படிப்பட்ட எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே அந்த தகவல் போலியானது. மேலும் அந்த தகவலை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.