ரூ.2 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பரிகியை சேர்ந்த சிவலீலா என்ற பெண் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் உழைத்து சம்பாதித்த ரூ.2 லட்சம் நோட்டுகளை ரேஷன் அரிசி பையில் கட்டி, அதற்குள் மூடி வைத்துள்ளார்.

இந்த நிலையில், அரிசியுடன் சேர்த்து நோட்டுகளையும் எலிகள் தின்றுள்ளன. இதனால், சேதமடைந்த நோட்டுகளுடன் வங்கிகளுக்குச் சென்றால், அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர். அவரது கணவர் நர்சிம்லு கொரோனாவின் போது உயிரிழந்த நிலையில், கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை சிவலீலா பறிகொடுத்து கலங்கி நிற்கிறார்.