என்னதான் உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறி வந்தாலும், இன்றளவும் உலகின் பல பகுதிகளில் வினோதமான சடங்குகள் பல பின்பற்றப்படத்தான் செய்யப்படுகிறது. நியூசிலாந்து நாட்டின் கார்டோனா என்ற பகுதியில்இளம் பெண்கள், தாங்கள் அணிந்திருக்கும் ப்ராவை கழட்டி, அங்கே இருக்கும் முள்வேலியில் கட்டிவிட்டு செல்கின்றனர்.

இப்பொழுது அந்த முள்வேளியில் ஆயிரக்கணக்கான உள்ளாடைகள் இருப்பதை நம்மால் காண முடிகிறது. தங்கள் மனதிற்கு பிடித்த மணமகன், தங்களுக்கு வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இவ்வாறு கடந்த 25 ஆண்டுகளாக பெண்கள் இதை செய்து வருகின்றனர்.