நைஜர் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயக ஆட்சியை கவிழ்த்த இராணுவம் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நைஜர் ராணுவம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இது குறித்து ராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே தொலைக்காட்சியில் பேசிய போது “மக்கள் மீதும் நம் நாட்டு மீதும் பாதிப்பை ஏற்படுத்த காத்திருக்கும் அனைவரையும் தோற்கடிக்க நாட்டு மக்களை ஒன்றிணைய அழைக்கிறோம். அண்டை நாடுகள் நைஜரின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம். தேர்தலுக்கு நாங்கள் அமைதியான சூழலை உருவாக்குவோம்” என கூறியுள்ளார். இந்த ஆட்சி கவிழ்ப்பை தொடர்ந்து அண்டை நாடான நைஜீரியா நைஜருக்கு மின்விநியோகத்தை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.