தமிழகம் மட்டும் இல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் மின்கட்டணம் தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது .அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் மின் கட்டணம் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஆந்திர மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மின் கட்டணம் உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் மாநிலத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொது கருத்து கேட்பு கூட்டமும் நடத்த திட்டம் இடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரையிலும் உள்நாட்டு நுகர்வோருக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட திட்டம் இல்லை என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்.