திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரகு சென்னை ஐஐடியில் படைத்து துபாயில் இன்ஜினியராக பணியாற்றியவர். இவர் சமீபத்தில் பீகாரத்தை சென்று இருந்த நிலையில் அங்கு அவருக்கு நடன அழகியோடு காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கையில் இருந்த பணத்தை காதலிக்காக செலவழிக்க தொடங்கினார். காதலி எதைக் கேட்டாலும் முடியாது என்று கூறாமல் வாங்கி கொடுத்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்த பணம் காலியானது.

இதனால் தன்னுடைய 15 ஆண்டுகால சேமிப்பு பணம் மொத்தத்தையும் காதலிக்காக செலவு செய்துள்ளார். ஆனாலும் அவரின் காதலி மீண்டும் மீண்டும் நிறைய கேட்க தொடங்கியதால் இன்ஜினியராக இருந்த ரகு கொள்ளையனாக அவதாரம் எடுத்துள்ளார். செயின் பறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் தன்னுடைய 40 வயதில் காதலிக்காக சிறை கம்பிகளை தற்போது அவர் எண்ணிக் கொண்டிருக்கிறார். சென்னை ஐஐடியில் இன்ஜினியராக படிப்பை முடித்துவிட்டு காதலுக்காக கொள்ளையனாக மாறிய இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.