தங்கத்தில் செருப்பு செஞ்சாலும் அதை கால்ல தான் போடணும் தலையில் தூக்கி வைக்க முடியாது என்று பழமொழி ஒன்றை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஐக்கிய அரபு நாடான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர ஷூ என்று கூறப்படுகிறது.

துபாயில் உள்ள நகை விற்பனை நிறுவனமான passion jewellers மற்றும் ஜடா துபாய் என்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்து மிக நேர்த்தியான இந்த விலை உயர்ந்த காலனியை தயார் செய்கின்றன. இதனை முழுமையாக வடிவமைத்து தயாரிக்க 9 மாத காலம் ஆனதாக கூறப்படுகிறது . 100க்கும் அதிகமான 15 காரட் வைர கற்களையும், தங்க கட்டிகளையும் பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட இந்த காலணியின் மதிப்பு 17 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 123 கோடி ஆகும்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

JADA DUBAI இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jadadubai)