பீகார் மாநிலத்தை சேர்ந்த சஷிகாந்த் பிரஜபதி எனும் 25 வயத இளைஞர் கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் 1.6 மில்லி மீட்டர் அளவில் உலகிலேயே சிறிய மர ஸ்பூனை செய்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார். உலக சாதனை புரிய பலமுறை பயிற்சி எடுத்த சஷிகாந்த் பத்து முறை இந்த ஸ்பூனை செய்ய முயற்சித்து தோல்வியடைந்துள்ளார்.

ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக சாதித்துக் காட்டியுள்ளார். இதற்கு முன்பு இரண்டு மில்லி மீட்டர் அளவில் மர ஸ்பூன் செய்யப்பட்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நிலையில் அந்த சாதனையை சஷிகாந்த் முறியடித்துள்ளார். சஷிகாந்த் பிரஜபதி இந்த ஸ்பூனை தனித்தனி பாகங்களாக தயார் செய்யாமல் ஒரு மரத்துண்டில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.