தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும். இதனால் நாளை முதல் மே 12ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன் பிறகு புயலாகவும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 11 ஆம் தேதிக்கு பின்னர் அது கரையை தொடாமலேயே வடகிழக்காக திரும்பி பங்களாதேஷ் நோக்கி நகர தொடங்கும். இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்படும்.