சாவித்ரி பாய் புலேவின் பெயரில் மத்திய அரசு பிஎச்டி படிக்கும் மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கி வருகின்றது. வீட்டில் சகோதரர்கள் இல்லாத மாணவிகளுக்கு இந்த தொகை வழங்கப்படுகின்றது. குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருந்தாலும் ஒருவருக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பிஎச்டி படிக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.