விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்ட விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் என் பிள்ளைக்கு சாமர்த்தியம் போதவில்லை, பெற்றோர் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள ப்ரோமோவில் பிள்ளைகள் சாமர்த்தியம் இல்லாமல் வெளி உலகில் இருப்பதை குறித்து பெற்றோர்கள் பேசி உள்ளனர். மற்றொரு வீடியோவில் பிள்ளைகள் ஏதாவது கருத்து கூறினால் உனக்கு ஒன்றும் தெரியாது வாயை மூடு என பெற்றோர்கள் கூறுவதை கோபிநாத் கண்டித்துள்ளார்.