தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அப்போது முதல் தற்போது வரை உச்சத்தில் இருந்து வருகிறார். இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  இவர் சினிமா மட்டுமின்றி பிசினஸ் செய்தும் வருகிறார். இந்த நிலையில் femi 9 பிராண்டின் தொடக்க விழா நடந்தது.இதில் பேசிய, விக்னேஷ் சிவன், என் அம்மாவும் அண்ணியும் பயன்படுத்திய விஷயம். நானே பலமுறை வாங்கி கொடுத்துள்ளேன்.

ஆனால் உள்ளே என்ன இருக்கிறது? எப்படி இருக்கும் ? என்பது எனக்கு தெரியாது. பொதுவாக கையில் ஏதாவது கிடைத்தால் அதை விளம்பரம் செய்பவர் நயன்தாரா கிடையாது. எட்டு மாதங்கள் அதை பயன்படுத்தி பின் அவர் ஒரு விஷயத்தைப் பற்றி வெளியே பேச ஆரம்பித்தால் அது அவருடைய இதயத்தில் இருந்து தெளிந்த பிறகு தான் பேசுவார். அதைப்பற்றி பெரிய யோசனை எதுவும் இல்லை. அந்த மாதிரியான நேரத்தில் என்னுடைய மனைவியும் கொஞ்சம் டென்ஷன் ஆகத்தான் இருப்பார். கொஞ்ச நாள் களைத்து கழித்து சாதாரணமாகி விடுவார் என்று தெரிவித்துள்ளார்.