தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின..

சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.

அதாவது நேபாளம் – உத்தரகாண்ட்  எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. நில அதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து வெளியேறினர். இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.