படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்நிலையில் தமிழ்நாடு அரசு தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் இன்று(செப்டம்பர்-23) கள்ளக்குறிச்சியில் உள்ள தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 9 மணி முதல்‌ பிற்பகல்‌ 3 மணி வரை நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த அனைவரும் கலந்துகொள்ளலாம். மேலும், தகுதியுள்ள இளைஞர்களுக்கு நாளையே பணி ஆணையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.