தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவத்துறை இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ள நிலையில் வகைப்படுத்தப்பட்ட தொற்றுநோய் தொடர்பான விவரங்களை அனைத்து மருத்துவங்களும் அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிய ப்படுத்த தெரிவித்துள்ளது.