பிரான்ஸ் நாட்டின் கோர்த்ரிஜ்க் நகரத்தில் ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது விடுமுறை விடப்பட்டதால் 14 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய ஆண் தோழருடன் அங்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் சிறுமியை நைசாக பேசி வனப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளான். அப்போது அங்கு சிறுவனின் தோழர்கள் சிலர் வந்துள்ளனர். இவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு 2 நாட்களாக வனப்பகுதிக்குள் சிறுமியை பிடித்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பேர் ஈடுபட்ட நிலையில் அவர்கள் அனைவரும் 11 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த செய்தியை பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரபல செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.