கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானியில் இருந்து கலிபோர்னியாவுக்கு சம்பவ நாளில் விமானம் ஒன்று கிளம்பியது. அந்த விமானத்தில் ஒரு பயணிக்கு அடிக்கடி இருமல் வந்ததால் அவரின் அருகில் இருந்த மற்றொரு பயணி வேறொரு இருக்கையில் சென்று அமர்ந்தார். அப்போது அந்த இருக்கையில் அமர வேண்டிய நபர் அங்கு வந்தார். அவர் அந்த நபரிடம் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ‌ இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அடிதடி சண்டையானது. அவர்கள் இருவரையும் ஊழியர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு விலக்கி விட்டனர். இந்த சம்பவத்தை விமானத்தில் பயணித்த மற்றொரு பயணி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இருக்கைக்காக விமானத்தில் பயணிகள் சண்டை போட்ட சம்பவம் பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.