அமெரிக்காவில் கடுமையான சூரியகாந்த புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டல ஆய்வகம் எச்சரித்துள்ளது. இன்று முதல் நாளை இரவு வரை கலிபோர்னியா -தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் முடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 19 ஆண்டுகளில் ஏற்பட்ட காந்த புயலை விட இது ஆபத்தானது எனவும் கூறப்படுகிறது.