சிறு குழந்தைகளின் கள்ளங்கபடம் இல்லாத செயல்கள் எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில், ஒரு சிறுமி எருமைக்கன்று ஒன்றிற்கு பல் துலக்கி விடும் அழகான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘மன்னத்’ என்ற அந்தச் சிறுமி, மிகவும் கவனமாக ஒரு பிரஷ்ஷை பிடித்துக்கொண்டு அந்தப் பெரிய எருமைக்கன்றின் பற்களைத் தேய்த்து விடுகிறார்.

அந்த விலங்கும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், ஏதோ ஸ்பாவிற்கு வந்தது போல அமைதியாக அந்தப் பல் துலக்கும் சேவையை ரசித்துக் கொண்டிருக்கிறது. கிராமப்புற இந்தியாவில் எடுக்கப்பட்டதாகத் தோன்றும் இந்த வீடியோவில், அந்தச் சிறுமி தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டு விளையாடுவதைப் பார்த்துப் பலரும் சிரித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் “உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?” என வேடிக்கையாகக் கேட்டு வருகின்றனர். அதே சமயம், மனிதர்களைப் போல விலங்குகளுக்குப் பல் துலக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மனிதர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பதால் பற்கள் சொத்தையாகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Deepak Kumar (@official_deepak_kumar_2581)

“>

ஆனால், விலங்குகள் இயற்கையான உணவுகளை உண்பதால் அவற்றின் பற்கள் தானாகவே ஆரோக்கியமாக இருக்கும் என்று அவர்கள் விளக்குகிறார்கள். இருப்பினும், அந்தச் சிறுமியின் மழலைத்தனமான அன்பும் அக்கறையும் காண்பவர் அனைவரது இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது.