பொதுவாகவே அனைவருக்கும் வளரும் பருவத்தில் கைகளில் தோல் உரியும். நம்முடைய அனைத்து வேலைகளிலும் கைகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. கைகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தோம். இவ்வாறு கைகளில் தோல் உரிவதற்கு என்ன காரணம் அதனை எப்படி தடுப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கைகளில் தோல் உரிவதற்கு முக்கிய காரணம் வறட்சி தான்.

நம்முடைய உடலில் ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்படும் போது நம்முடைய உள்ளங்கைகளில் தோல் உரியும். தோல் உரியும்போது நம்முடைய கையில் ஏதோ இருப்பது போலவே உணர்வு இருக்கும். சில சமயங்களில் நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதாலும் கைகளில் தோல்வியும் பிரச்சனை ஏற்படலாம். அதே சமயம் சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப்பு மற்றும் கிரீம்களின் பயன்பாடு, பருவ மாற்றம், அலர்ஜி மற்றும் அரிப்பு போன்ற காரணங்களாலும் தோல் உரியலாம். மேலும் பாக்டீரியா தொற்று, நோய் தொற்று மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் தோல் உறியும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே உங்களுக்கு வறண்ட சருமத்தால் தோல் உரிந்தால் வெதுவெதுப்பான நீர் ஊற்றி தேவையென்றால் இரண்டு எலுமிச்சை சாறு தொழில்களை சேர்த்து அதில் பத்து நிமிடங்கள் உள்ளங்கைகளை வைத்து பிறகு கைகளை மெதுவாக துடைத்தால் வறட்சி நீங்கி தோல் உரிவது குறைந்து விடும். விட்டமின் ஈ எண்ணெய்யை கைகளில் தடவி மசாஜ் செய்தால் ஈரப்பதம் இருக்கும். தோல் உரியும் பிரச்சனையும் இதனால் குறைந்து விடும். கற்றாழையை எடுத்து அதன் தோலை சீவி அதனை தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து கற்றாழையில் இருக்கும் மஞ்சள் திரவம் வெளியேறிய பிறகு அதன் ஜெல் கைகளில் மசாஜ் செய்தால் தீர்வு கிடைக்கும்.தேங்காய் எண்ணெயை கைகளில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்தால் கைகளில் பாக்டீரியா தொற்றுகள் இருந்தாலும் விரைவில் நீங்கும்.