இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆதார் மூலம் பணத்தை திருடும் கும்பல் அதிகரித்து வருவதாக ஆதார் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக பொய் சொல்லி மோசடிக்காரர்கள் ஒரு லிங்கை அனுப்புவார்கள். அதில் உங்களது ஆதார் எண்ணை உள்ளிடும்போது அதனை வைத்து மோசடி நடைபெறுகிறது. உங்களது ஆதார் எண்ணை கேட்டு வரும் மெயில் மற்றும் எஸ்எம்எஸ்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.