டெல்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் இடத்தில் 85 வயது மூதாட்டி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆகாஷ் என்ற 28 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார் . அதன் பிறகு அந்த கொடூரன் மூதாட்டி உதடுகளை பிளேடால் வெட்டி அவரது அந்தரங்க உறுப்புகள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளான். விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.