ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இன்று வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாக்களிக்க வரும்போது தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என வாக்காளர்களை தேர்தல் பணி அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.