ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

வாக்குப் பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக தன் தள்ளாத வயதிலும் மூதாட்டி ஒருவர் ஜனநாயக கடமையை தவறவில்லை. அதன்படி நடக்க முடியாத அவர் தள்ளுவண்டியில் சென்று ஈரோடு இடைத்தேர்தலில் தன் வாக்கை பதிவுசெய்துள்ளார்.