சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லட்சுமி நாராயணன் பதவி ஏற்றுள்ளார். தலைமை நீதிபதி டி.ராஜா லட்சுமி நாராயணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் சுப்ரீம் கோர்ட் சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா ஹைகோர்ட்டுகளிலும் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியம், மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய மருத்துவ நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.