இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதன்படி ஹமாஸ் அமைப்பினர் முதல் கட்டமாக 24 பணய கைதிகளை விடுதலை செய்துள்ளனர். இவர்களில் 13 பேர் இஸ்ரேலியர்கள் 12 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.