இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பாலஸ்தீனர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள விமான நிலையத்தை பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனால் விமான நிலையத்தில் பதட்டமான சூழல் நிலவியது. ஆனால் 45 நிமிடங்களில் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 36 பேரையும் நியூயார்க்கில் 26 பேரையும் கைது செய்துள்ளனர்.