இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு இலவச உணவு வழங்குவதாக மெக்டொனால்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராணுவ வீரர்களுக்கு ஏற்கனவே 4 ஆயிரம் உணவுகள் வழங்கப்பட்டுவிட்டன. தினமும் ஆயிரக்கணக்கான உணவுகள் தயார் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக 5 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. காஸாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பதை விட வீரர்களுக்கு உணவளிப்பதை சிலர் எதிர்க்கின்றனர். ‘மெக்டொனால்ட்ஸைப் புறக்கணிக்கவும்’ என்று பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.