பிரபல நடிகரும், மனிதாபிமான கொடையாளருமான சோனு சூட், மேலும் ஒரு முறை தனது தாராள மனப்பான்மையாலும் துணிச்சலான செயலாலும் தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அவர் தங்கும் கட்டிட வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை, எந்தவிதமான பீதி இல்லாமல் தனது வெறும் கைகளால் பிடித்து, ஒரு துணிப் பையில் பாதுகாப்பாக வைத்தார்.
இந்த வீடியோவை சோனு சூட் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இந்த பாம்பு விஷமற்றது, தயவுசெய்து இது போன்ற செயல்களை நீங்கள் முயற்சிக்க வேண்டாம். எனக்கு இப்படியொரு சூழ்நிலையை கையாளும் பயிற்சி உண்டு” என தெளிவாக கூறியுள்ளார்.
சோனு சூட் கூறியதாவது, அந்த பாம்பு பின்னர் இயற்கை சூழலுக்கே பாதுகாப்பாக விடப்படுவதாகவும், இது போன்ற தருணங்களில் ஆளுமை காட்டுவது என்பது பொது மக்களுக்கு ஒரு பொறுப்புள்ள உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த வீடியோவை அவர் “ஹர் ஹர் மகாதேவ்” என்ற தலைப்பில் வெளியிட்டார். சிவபெருமான் வழிபாட்டில் பாம்புகள் ஒரு புனித சின்னமாக கருதப்படுவதால், இது பக்தி உணர்வோடும் கூடியது.
View this post on Instagram
“>
இதனிடையே, சோனு சூட் சமீபத்தில் ‘மிஸ் வேர்ல்டு ஹியூமனிடேரியன்’ விருது பெற்றார். இந்த விருதை நடிகர் ராணா டகுபதி வழங்கினார். விருதை பெற்றதற்குப் பிறகு, சோனு தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்த விருது பேருந்துக்காக காத்திருக்கும் தாய்மார்களுக்கும், கனவு காணும் மாணவர்களுக்கும், நடைப்பயணம் செய்தும் நம்பிக்கையை இழக்காத புலம்பெயர்ந்த மக்களுக்கும் உரியது” என்று உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்திருந்தார். புகைப்படத்தில் அவர் கோப்பையுடன் பெருமையுடன் போஸ் கொடுத்திருப்பது பாராட்டைப் பெற்றது.
ஒரு மனிதாபிமானத்தின் உண்மை முகமாகவும், சிறந்த நடிகராகவும் சோனு சூட் தனது சமூக பொறுப்புகளை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
