அமைச்சர் முத்துசாமி நேற்று  சென்னையில் 21 டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”மதுவாங்க வரும் சிறுவர்கள்  குறித்து தகவல் தரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதல் முறையாக டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க வருவோர் மற்றும் சிறார்களை கண்டறிந்து போதை பழக்கத்தில் ஈடுபடாமல் இருப்பது குறித்து அவர்களுக்கு கவுன்சிலிங் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மதுவை டெட்ரா பேக்கில் விற்பது குறித்து கமிட்டி அமைத்துள்ளதாகவும், அவர்கள் தரும் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.