தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆகஸ்ட் 19 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் ஏவிஎம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தொழில்முறையாளர்கள், பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ என அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம் எனவும் இந்த முகாமில் கலந்து கொள்ள வேலை வாங்குபவர்கள் https://forms.gle/3irie6FysPwH8w6K6 என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் வேலை தேடுபவர்கள் https://forms.gle/zyiyyRnNnvRFLt1D9 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் கூடுதல் விவரங்களுக்கு 0451-2904065 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.