தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 23ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்ககம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம் எனவும் அப்போது வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.