இப்போதெல்லாம் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துவிட்ட நிலையில் குற்ற சம்பவங்களும், மோசடிகளும் எளிதாக அரங்கேறி விடுகிறது. அந்தவகையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த சிறுதொழில் வியாபாரி (32) ஒருவருக்கு ஃபேஸ்புக்கில் இளம்பெண் ஒருவரோடு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப்பில் பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நிர்வாணமாக வீடியோ காலில் பேசும்போது அதை பதிவு (Recording) செய்து வைத்துக் கொண்டு இளைஞரை மிரட்டி ரூ.1.53 லட்சம் பணம் கேட்டு வாங்கியுள்ளார். மேலும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையில், இளைஞர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.