படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அருப்புக்கோட்டையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு சங்கம் சார்பாக அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே கல்லூரியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது.

இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்பை முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்வி சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.