தமிழகத்தில் பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையியல் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மற்ற மாவட்டங்களில் அளிக்கப்பட்ட விடுமுறைக்கு ஏற்ப முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.