உத்தர பிரதேசத்தில் அபிஷேக் (31) என்ற இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சுவலித்ததால் Acidity மருந்து சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதற்கு முறையற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்றவையே முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.