நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, பருப்பு, சீனி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதியுதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் விவரங்களை புதுப்பிக்காவிட்டால் மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

புதுப்பிப்பு பணிகள் 50% மட்டுமே நிறைவடைந்துள்ளதால், நவம்பர் மாத இறுதிக்குள் 70% பணிகளையும், டிசம்பர் மாத இறுதிக்குள் 100% பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும். விவரங்கள் புதுப்பிக்கப்படாத பட்சத்தில் அட்டைதாரர்களின் மானியம் நிறுத்தப்படும்.