தென்காசி மாவட்டத்தில் கிருத்திகா என்ற இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கு சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசியில் ஒருவரையும், குஜராத்தில் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டதாக நேற்று கிருத்திகா தெரிவித்திருந்தார். அவரை தென்காசியில் கடத்திய பெற்றோர் 5 கார்களில் மாறி மாறி குஜராத் கொண்டு சென்றனர்.

இதையடுத்து, குஜராத்திலிருந்து வழக்கு விசாரணைக்காக சென்ற வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகிய கிருத்திகா காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கிருத்திகாவிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அவரை யாரிடமும் அனுப்ப இயலாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு கிருத்திகா தொடர்ந்து காப்பகத்திலேயே இருக்கவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.