தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.7000 கோடிக்கு நிர்வாக அனுமதியும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாதாக, எதன் அடிப்படையில் யாருக்கு எல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்ற விரிவான அறிவிப்பையும் அரசு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில்  1000 வழங்குவது தொடர்பாக வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் முகாம் அல்லது ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதோடு கைரேகையை பதிவு செய்துவிட்டு வர வேண்டும். அதன் அடிப்படையில் தகுதிபெற்ற மகளிருக்கு மாதம் 1000 வழங்கப்படும்.