இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள நைனாத்தீவு டெல்ப்ட் தீவு அனலத் தீவு போன்ற இடங்களில் மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இந்தியா வழங்கும் மானிய உதவியுடன் இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. மந்திரி சபை கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகத்துறை மந்திரி பந்துல குணவர்தனே கூறியுள்ளார்.