சத்தீஸ்கர் மாநிலத்தில் 71 வயது பெண் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவருடைய உடலை பீகாரில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்லும்போது அவரின் உடலில் அசைவுகள் இருந்துள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததில் அவர் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அந்த பெண் இறந்த நிலையில் வாகனத்தில் கொண்டு வரும்போது அது சி பி ஆர் கருவி போல செயல்பட்டு அவர் உயிர் பிழைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.