தமிழ் சினிமாவில் தி லெஜண்ட் படத்தில் நடித்து இருந்தவர் ஊர்வசி ரவுத்தலா. இவர் இந்தியில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இதற்கிடையில் இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் அவ்வப்போதும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதே சமயத்தில் ஊர்வசி ரவுத்தலா சில நேரங்களில் ரிஷப் பண்ட்டை விமர்சிக்கும் அடிப்படையிலும், சில நேரங்களில் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிடுகிறார்.

இவ்வாறு அவர்கள் காதலிப்பதாக கூறப்படும் நிலையில, இருவரும் இதை மறுத்தே வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் ரிஷப்பை, ஊர்வசி நேரில் சென்று பார்த்ததாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மருத்துவமனையின் புகைப்படத்தை தனது ஸ்டேட்டஸில் வைத்துள்ளார் ஊர்வசி.