தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை புரட்டி எடுத்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உட்பட 31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ரா.பேட்டை, சென்னை, செ.பட்டு, காஞ்சி, தி.மலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், பு.கோட்டை, திருச்சி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.