தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி, இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தேர்தல் விதிகளை மீறி பிரதமர் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார்.அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? இதுவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பரப்புரைக்கு செல்லும் வழியில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினால் என்னென்ன சொல்லியிருப்பார்கள்?” என கேள்வி எழுப்பினார்.