உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த கோர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரேலி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் தீயில் கருகி உயிரிழந்தனர். நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் குழந்தைகள் 3 பேர் மற்றும் பெற்றோர் என ஐந்து பேர் உயிரிழந்தனர்.  இறந்தவர்கள் அஜய் குப்தா (35), அவரது மனைவி அனிதா குப்தா (34), மகன்கள் திவ்யான்ஷ் (9), தக்ஷ் (3) மற்றும் மகள் திவ்யான்ஷி (6) என அடையாளம் காணப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பாவிடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.